திருக்குமரனின் கவிதைத் தொகுப்புக்கள்
"எங்கள் அழுகையும் உயிர்களும் தியாகமும் எந்த விதத்திலும் குறைந்தவை அல்ல, மீண்டும் கந்தக விளைச்சலை வெறுக்கிறோம். இருப்பினும் நாம் வீரமாய் இருக்கிறோம்"
- திருக்குமரன்
திருக்குமரன் கவிதைகள்
முதல் பதிப்பு : ஆவணி 2004
கரிகணன் பதிப்பகம்

விழுங்கப்பட்ட விதைகள்
முதல் பதிப்பு (2011):
உயிரெழுத்துப் பதிப்பகம்
(இடப்புறம் )
இரண்டாம் பதிப்பு (2015):
தமிழோசை பதிப்பகம்
(வலப்புறம் )
"எமக்கான பருவம் என்று ஒரு நாள் வரும். அன்று கூட்டம் கூட்டமாய் நாங்கள் கூடு திரும்புவோம். எங்கள் மண்ணும், காற்றும், வயல் வெளிகளும், மரங்களும் எங்களுக்காகத் தான் தோழர்களே காத்துக் கிடக்கின்றன..."
-திருக்குமரன் .

இத்தொகுப்பில் உள்ள கவிதைகளை நாம் வாசிக்கையில் கவித்துவ அனுபவத்தையும் மீறி நம்மீது துயரத்தின் நிழல் படிவதை உணராமல் இருக்க முடியாது. சமகாலத்தில், நம் கண்ணெதிரே நம் சொந்த மக்கள் மடிவதைப் பார்த்திருந்தோம். அது எத்தகைய துயரம் என்பதைத் திருக்குமரனின் கவிதைகள் வழியே உணர முடிகிறது. குறிப்பாக, போர்க்காலத்தில் மட்டுமல்ல; போருக்குப் பிந்திய, போர்த் தோல்விக்குப் பிந்திய காலகட்டத்தின் துயரத்தை.
திருக்குமரனின் கவிதைகள் நம் மனசாட்சியிடம் நேரடியாகப் பேசுகின்றன. ஓர் இனத்தின் விடுதலைக்காக போராடியவன் இத்தகைய வாதைகளைத் தான் அனுபவிக்க வேண்டுமா என்ற கேள்வியை அக்கவிதைகள் நம்மை நோக்கிக் கேட்கின்றன...
- சுதீர் செந்தில்
தனித்திருத்தல்
முதல் பதிப்பு : டிசம்பர் 2014
உயிரெழுத்துப் பதிப்பகம்
புது வரவு

விடைபெறும் வேளை
முதல் பதிப்பு :
செப்ரம்பர் 2019
யாவரும் பதிப்பகம்

